போர் விமான கொள்வனவு - அமெரிக்காவுடன் கனடா ஒப்பந்தம்!

போர் விமான கொள்வனவு - அமெரிக்காவுடன் கனடா ஒப்பந்தம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தனது கடற்படையை மேம்படுத்த முயலும் கனடா அரசாங்கம்88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் 19 பில்லியன் கனேடிய டொலர்...

தனது கடற்படையை மேம்படுத்த முயலும் கனடா அரசாங்கம்
88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் 19 பில்லியன் கனேடிய டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகளில் றோயல் கனடிய விமானப்படையில் மிகப்பெரிய முதலீடாக இருப்பதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

முதல் நான்கு எஃப்-35 விமானங்கள் 2026 இலும் , கடற்படைக்கான முழு செயல்பாட்டுத் திறனுக்கான எஃப்-35 விமானங்கள் 2032 மற்றும் 2034ஆம் ஆண்டுகளுக்கு இடையிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெறும் ‘த்ரீ அமிகோஸ் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கனேடிய பாதுகாப்பு அமைச்சர் யுக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் பெருகிய உறுதியான நடத்தை ஆகியவற்றுடன், நமது உலகம் இருண்டதாக வளர்ந்து வருவதால், இந்த திட்டம் உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது’ என கூறினார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்