இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. Anopheles stephensi என்ற நோய்கிருமி யாழ்ப்பாணம் கல்முனை ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ் சந்திர தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.