சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனமொன்று விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனம் விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் வெளியிட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணிக்கும் விமான பயணிகளில் கிட்டத்தட்ட 100% தமிழர்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மலிவுக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.