இலங்கை தலசீமியா நோயைத் தடுப்பதில், தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதென, களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் சசித் மெத்தானந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தலசீமியா நோய் பரவும் நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளதாக குறிப்பிட்டார். உலகில் தலசீமியா நோய் பரவல் அதிகமாக உள்ள ஏனைய நாடுகளால், குறித்த நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.