இலங்கையில் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையிலுள்ள அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினர், இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்...

இலங்கையிலுள்ள அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினர், இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன Dinesh Gunawardena தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ‘புதிய கிராமம் – புதிய நாடு’ மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், நாடு சந்தித்த நெருக்கடியான காலத்தில் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த 2 ஆண்டுகளாக அரசாங்க ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் நாட்டுக்காக திறமையாக பணியாற்ற வேண்டும். ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விவசாயத் துறையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்